உள்ளூர் செய்திகள்

மரத்தில் பந்தல் அமைத்து வெள்ளை மிளகு சாகுபடி

வெள்ளை மிளகு சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.ராஜிவ் காந்தி கூறியதாவது:மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ செடிகளை நட்டுள்ளேன். இதன் வாயிலாக, ஆண்டுதோறும் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.வரப்பு பயிராக வேங்கை, தேக்கு, மகாகனி, ஈட்டி உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்துள்ளேன். இதில், வேங்கை மரத்தில் வெள்ளை மிளகு கொடி ஏற்றியுள்ளேன்.குறிப்பாக, வேங்கை மரத்தின் உயரத்திற்கு வெள்ளை மிளகு கொடியை ஏற்ற முடியாது. வேங்கை மரத்தின் பாதியில் பந்தல் போல அமைத்து, கொடியை திருப்பி விட வேண்டும். அப்போது தான் மிளகு பறிக்க சவுகரியமாக இருக்கும்.வெள்ளை மிளகின் பழம், இளஞ்சிவப்பு நிறத்திலும், தோல் நீக்கிய பின், மிளகு வெள்ளை நிறத்திலும் இருக்கிறது. கருப்பு மிளகை காட்டிலும், வெள்ளை மிளகு அதிக காரமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எம்.ராஜிவ் காந்தி,89402 22567


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்