காட்டுப்பாக்கத்தில் இயற்கை வேளாண் பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், இயற்கை வேளாண் மற்றும் அங்கக வேளாண் குறித்து ஒரு நாள் பயிற்சி இன்று அளிக்கப்பட உள்ளது என, பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பெ.முருகன் தெரிவித்தார். இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு:- முனைவர் பெ.முருகன்,99405 42371