உள்ளூர் செய்திகள்

மாடி தோட்டத்தில் டிஞ்சர் இலை சாகுபடி

மாடிதோட்டத்தில், டிஞ்சர் இலை சாகுபடி குறித்து, கே.கவிதா கூறியதாவது:மாடி தோட்டத்தில், கத்திரி,தக்காளி ஆகிய நாட்டு ரக காய்கறி வகைகள் மற்றும் திப்பிலி, மிளகு துளசி உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகளை சாகுபடி செய்து வருகிறேன்.இந்த மூலிகை சாகுபடியின் வாயிலாக, தலைக்கு தடவுவதற்கு எண்ணெய் உள்ளிட்ட மதிப்புகூட்டிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்து, கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன். அந்த வரிசையில், மாடி தோட்டத்தில் டிஞ்சர் இலை சாகுபடி செய்து வருகிறேன். இந்த இலையில் இருந்து வரும் சாறு, சற்றே மாறுபட்டதாக உள்ளது. பொதுவாக, இலைகளில் இருந்து பச்சை நிறத்தில் தான் சாறு வரும். இந்த டிஞ்சர் இலையில் இளஞ்சிவப்பு நிறத்தில் சாறு வருகிறது. வெட்டு காயம், சிராய்ப்பு ஆகிய காயங்களுக்கு தடவலாம்.மாடி தோட்டம் மற்றும் மூலிகை சாகுபடியை பொறுத்தவரையில், மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால் மட்டுமே, அதிக வருவாய் ஈட்ட முடியும். அதற்கேற்ப, தோட்ட பராமரிப்பாளர்கள் சந்தைப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். தொடர்புக்கு: கே.கவிதா, காஞ்சிபுரம்.88708 00021


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !