உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.42,018 கோடி

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.42,018 கோடி

பெங்களூரு:  எஸ்.சி., சமுதாயத்தினருக்கு 29,922 கோடி ரூபாய்; எஸ்.டி., சமுதாயத்தினருக்கு 12,026 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என மொத்தம் 42,018 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அரசு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவை சேர்ந்த குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு, 2 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் பிரகதி காலனி திட்டத்தின் கீழ் எஸ்.சி., பிரிவினருக்கு குடியிருப்புகள் கட்டும் பணிக்கு 222 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினர் மீது நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க புதிதாக 33 சிறப்பு போலீஸ் நிலையங்கள் எஸ்.சி., - எஸ்.டி., - பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக, மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி பி.யு., கல்லுாரியாக மாற்றப்படும் பேரூராட்சிகளில், புதிதாக எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்காக 26 பள்ளிகள் கட்டப்படும் கே.ஆர்.ஐ.இ.எஸ்., சார்பில் 61 உறைவிட பள்ளிகளுக்காக 1,292 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தற்போதைய கே.ஆர்.ஐ.இ.எஸ்., உறைவிட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு 213 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வாடகை கட்டடத்தில் உள்ள சமூக நலத்துறையின் 34 விடுதிகள், 213 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடத்திற்கு மாற்றம் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேரும் இரண்டு மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கல் வேலையில்லாத எஸ்.சி., இளைஞர்களுக்கு நடமாடும் வண்டி கடை வைப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் பெங்களூரு ஆதரவற்றோர் நிவாரண மையத்தில் புதிதாக மன நல மையம் விடுதிகளில் உணவு வழங்கும் முறை கண்காணிக்கப்படும் தாவணகெரே, பஞ்சாரா சமுதாயத்தவருக்கு புனித சேவாலால் கோவிலில் உறைவிடப்பள்ளி துவங்கப்படும் புகழ் பெற்ற 100 தேசிய கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் எஸ்.சி., மாணவர்களுக்கு உதவித்தொகை கர்நாடகா எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான துணை ஒதுக்கீடு சட்டம் 2013ன் படி, மானியம் சரியாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும் எஸ்.சி., - எஸ்.டி., - பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் தொடர்பான பிரச்னைகள் குறித்த சிறப்பு விவாதங்கள், சட்டசபையில் நடக்கும் தனியார், அரசு கல்லுாரிகளின் விடுதிகளில் தங்கி மருத்துவம், பொறியியல் படிப்போருக்கு மாதம் 3,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் பால் பண்ணை தொழில் நடத்துவதற்கு இரண்டு பசு அல்லது எருமைகள் வாங்க எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 50 சதவீதம் மானியம் அல்லது 1.25 லட்சம் ரூபாய் வழங்கல் எஸ்.சி., - எஸ்.டி., மகளிர் சுய உதவி குழுக்களில் வழங்கப்படும் கடன் மற்றும் உதவித்தொகை 2.50 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி