பெங்களூரில் 60 இண்டிகோ விமானம் ரத்து பயணியர் அவதி
பெங்களூரு: தனியார் துறையை சேர்ந்த 'இண்டிகோ' விமான நிறுவனம், நம் நாட்டில் அதிக விமான சேவைகளை வழங்கி வருகிறது. விமானி, விமானப் பணியாளர்களுக்கான பணி நேரம், விடுப்பு உள்ளிட்ட மத்திய அரசின் புதிய விதிகளுக்கு, அந்நிறுவனம் இணங்கவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக அந்த விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் நாடு முழுதும் பயணியர் பாதிக்கப்பட்டனர்.இதற்கிடையில், நேற்று நாடு முழுதும் இந்நிறுவனத்தின் 1,950 விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று பெங்களூருக்கு வர வேண்டிய 32 விமானங்களும், பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய 28 விமானங்களும் என 60 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணியர் அவதிக்குள்ளாகினர்.