கர்நாடகாவில் ஒரே ஆண்டில் 971 விவசாயிகள் தற்கொலை
பெங்களூரு: மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களுக்கு இடையிலும் விவசாயிகள் தற்கொலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கர்நாடகாவில் ஒரே ஆண்டில் 971 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.விவசாயிகளின் நலனுக்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளன.தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பின், விவசாயிகள் தற்கொலைகள் குறைந்ததாக காங்கிரசார் கூறுகின்றனர். ஆனால் ஒரே ஆண்டில் 971 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
விவசாய உபகரணங்கள், உரம், விதைகளின் விலை உயர்வு, கடன் தொல்லை, விளைச்சல் சேதமடைந்தது, விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்காதது போன்ற, பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2024 ஏப்ரல் 1 முதல், 2025 மார்ச் இறுதி வரை, கர்நாடகாவில் 971 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.விவசாயிகள் தற்கொலையில் ஹாவேரி முதலிடத்தில் உள்ளது.