உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பான் பெருமாள் கோவிலில் ஆண்டாள் கூடாரி உத்சவம் 

 பான் பெருமாள் கோவிலில் ஆண்டாள் கூடாரி உத்சவம் 

ஹலசூரு: தனுர் மாதத்தை முன்னிட்டு, ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் நாளை ஆண்டாள் கூடாரி உத்சவம் நடக்கிறது. பெங்களூரு ஹலசூரு மார்க்கெட் பஜார் தெருவில், பிரசித்தி பெற்ற பான் பெருமாள் கிருஷ்ணா மந்திர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தனுர் மாதத்தை முன்னிட்டு, ஆண்டாள் கூடாரி உத்சவம் நாளை நடக்கிறது. காலை 8:00 முதல் 9:30 மணி வரை திருப்பாவை சேவா களம், சாத்துமுறை மங்களாரத்தி நடக்கிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாரம் விநியோகிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 94811 84833, 94492 55373 என்ற மொபைல்போன் எண்களை அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை