உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கோலார் மாவட்ட காங்கிரசில் மேலும் ஒரு செயல் தலைவர்

 கோலார் மாவட்ட காங்கிரசில் மேலும் ஒரு செயல் தலைவர்

கோலார்: கோலார் மாவட்ட காங்கிரஸ் செயல் தலைவராக, சீனிவாசப்பூர் நாராயணசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லட்சுமி நாராயணா. இவர், அமைச்சர் கே.எச்.முனியப்பாவின் ஆதரவாளர். இவரின் கவனத்திற்கு வராமலேயே, மேலும் ஒரு செயல் தலைவரை மாநில காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. இதனால், அமைச்சர் முனியப்பா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மாவட்ட செயல் தலைவராக ஊர்பாகிலு ஸ்ரீனிவாஸ் உள்ளார். இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் ஆதரவாளரான சீனிவாசப்பூர் நாராயணசாமி என்பவரை, மேலும் ஒரு செயல் தலைவராக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நி யமித்துள்ளார். ஏற்கனவே மாவட்ட காங்கிரசில், அமைச்சர் கே.ஹெச்.முனியப்பாவின் ஆதரவாளர்களே தலைவர், செயல் தலைவர் பதவிகளில் இருக்கும் போது, முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாரின் ஆதரவாளரான நாராயண சாமியை நியமித்துள்ளதால் சலசலப்பு ஏற்ப ட்டு உள்ளது. புதிய செயல் தலைவரான நாராயணசாமி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர். பு திய செயல் தலைவர் நியமனம் குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூறுகையில், ''எனக்கு எதுவுமே தெரியாது. சமூக ஊடகங்களின் மூலம் தான் தகவல் அறிந்தேன். அதன் பிறகே அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை