அசாம் தேர்தல் சிவகுமாருக்கு பொறுப்பு
பெங்களூரு: அசாம் மாநில தேர்தலில், காங்கிரசின் மூத்த பார்வையாளராக, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில் இன்னும் சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்காக அசாம் மாநிலத்திற்கு, காங்கிரசின் மூத்த பார்வையாளராக, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். முதல்வர் பதவியை எதிர்பார்த்து அவர் காய் நகர்த்தி வரும் நிலையில், அவருக்கு புதிய பொறுப்பை கட்சி மேலிடம் கொடுத்து உள்ளது. இதன்மூலம் அசாம் மாநில தேர்தல் முடியும் வரை, கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் நடக்க வாய்ப்பில்லை என்று கூ றப்படுகிறது.