உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிறந்த இரண்டே நாட்களில் பெண் குழந்தை விற்பனை

பிறந்த இரண்டே நாட்களில் பெண் குழந்தை விற்பனை

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின், ஹராவரி கிராமத்தை சேர்ந்தவர் சதானந்தா, 35, இவரது மனைவி ரத்னா, 28, கர்ப்பமாக இருந்தார்.இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், கொப்பா அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். மே 22ம் தேதியன்று, ரத்னாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறப்பதற்கு முன்பே, ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை நர்ஸ் குஸ்மாவின் சகோதரர் ராகவேந்திராவுக்கு விற்பனை செய்ய, சதானந்தா -- ரத்னா தம்பதி, ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர். 1 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி, 5,000 ரூபாய் முன் பணம் பெற்றிருந்தனர்.அதன்படி குழந்தை பிறந்த இரண்டு நாட்களில், குழந்தையை ராகவேந்திராவுக்கு விற்றனர். இது குறித்து, தகவல் அறிந்த என்.ஆர்.புரா போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். ஹராவரி கிராமத்துக்கு சென்று, அந்த தம்பதியிடம் விசாரித்தனர். குழந்தையை விற்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.அதன்பின் கார்கலா சென்று, ராகவேந்திராவிடம் இருந்த குழந்தையை மீட்டனர். தனக்கு குழந்தை இல்லாததால், சகோதரி மூலமாக குழந்தையை வாங்கியதை ஒப்புக்கொண்டார். தற்போது குழந்தையை மாவட்ட குழந்தைகள் நலன் கமிட்டி பராமரிப்பில் ஒப்படைத்துள்ளனர்.குழந்தையை விற்ற தம்பதியையும், ஓய்வு பெற்ற நர்சையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி