மேலும் செய்திகள்
அரங்கநாத பெருமாள் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
23-Aug-2025
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் மலை மஹாதேஸ்வரா மலை கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். 30 நாட்களுக்கு பின் நேற்று முன் தினம் கண்காணிப்பு கேமரா பாதுகாப்பில், உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இரவு வரை பணி நீடித்தது. உண்டியலில், 1.70 கோடி ரூபாய் காணிக்கை வசூலானது. 30 கிராம் தங்கம், 1,100 வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வந்தன. 'இ - உண்டியல்' மூலம், 3,92,123 வந்துள்ளது. புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள் மூன்று நோட்டுகள் இருந்தன.
23-Aug-2025