உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்

நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்

கார்வார்; உத்தர கன்னடாவில் சிறுவன் உட்பட 4 பேர், குரங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.குரங்கு காய்ச்சல் ஷிவமொக்கா, உத்தர கன்னடா மாவட்டங்களில் அடிக்கடி பரவி வருகிறது. இந்நிலையில் உத்தர கன்னடாவின் ஷிர்சி ஹெக்கடகட்டே, ரேவணகட்டே கிராமத்தின் ஒரு சிறுவன் உட்பட 2 பேருக்கும், சித்தாபுராவின் கானசூரி, ஹொன்னவரதா கிராமத்தில் 2 பேருக்கும் நேற்று குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.இதனால் கிராம மக்களும், சுகாதார துறை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெயில் தாக்கத்தால் குரங்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என, கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை