உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  டில்லிக்கு செல்ல மாட்டேன்: சபாநாயகர் காதர் தகவல்

 டில்லிக்கு செல்ல மாட்டேன்: சபாநாயகர் காதர் தகவல்

மங்களூரு: ''அமைச்சர் பதவி கேட்டு டில்லிக்கு செல்ல மாட்டேன்,'' என்று, சபாநாயகர் காதர் கூறியுள்ளார். மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஊடகங் கள் கூறும் தகவலின் அடிப்படையில் யாருக்கும் அமைச்சர் பதவி கிடைப்பது இல்லை. செயல்பாட்டின் அடிப்படையில் பதவி கிடைக்கிறது. அமைச்சர் பதவி கேட்டு நான் டில்லி செல்ல மாட்டேன். தற்போது சபாநாயகராக உள்ளேன். அரசு பரிந்துரைக்கும் போது, சட்டசபையை கூட்டுவது எனது பணி. நான் எம் .எல்.ஏ.,வாக இருந்த போது, சிறந்த எம்.எல்.ஏ., விருது பெற்று உள்ளேன். சுகாதார அமைச்சராக பணியாற்றிய போது தேசிய விருது கிடைத்தது. இதன் அடிப்படையில் என்னை சபாநாயகராக தேர்வு செய்தனர். இந்த பதவியில் சுதந்திரமாக செயல்படுகிறேன். கட்சி மே லிடம் கூறியதை நான் மீறியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை