கர்நாடக காங்., சமூக ஊடக பிரிவுக்கு புதிய தலைவர்
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு தலைவராக உள்ள நடராஜ் கவுடா பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், புதிய தலைவராக ஐஸ்வர்யா மகாதேவ் நியமிக்கப் பட்டு உள்ளார். வக்கீலான இவர், காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளராகவும், கர்நாடக காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலராகவும் உள்ளார். 'டிவி' விவாதங்களிலும் பங்கேற்றவர். இவரது சொந்த ஊர் மைசூரு கே.ஆர்.நகர்.