உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காதல் கணவர் மதமாற்றம்? மனைவி மீது போலீசில் புகார்

காதல் கணவர் மதமாற்றம்? மனைவி மீது போலீசில் புகார்

கதக்: காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண், ஹிந்து இளைஞரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதாக, தகவல் வெளியாகியுள்ளது.கதக் நகரின், காந்தி நகரில் வசிப்பவர் விஷால் குமார் கோகாவி, 25. ஹிந்து மதத்தை சேர்ந்த இவர், முஸ்லிம் சமுதாயத்தின் தஹசினா, 22, என்பவரை காதலித்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி 2024 நவம்பர் 24ல், இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.பதிவு திருமணம் முடிந்த பின், முஸ்லிம் சமுதாய சம்பிரதாயப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என, தஹசினா நெருக்கடி கொடுத்துள்ளார். இதற்கு விஷால் குமாரும் சம்மதித்தார். நடப்பாண்டு ஏப்ரல் 25ல் முஸ்லிம் சம்பிரதாயப்படி, திருமணம் நடந்தது.திருமணத்தின்போது, விஷால் குமாரின் கவனத்துக்கு தெரியாமல், அவரது பெயரை மாற்றியுள்ளனர்.இப்போது தஹசினாவும், அவரது தாயும் முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி பலவந்தப்படுத்தினர். 'தொப்பி, ஜுப்பா அணிந்து கொள், குங்குமத்தை அழி, தாடி வை, தினமும் நமாஸ் செய்' என கட்டாயப்படுத்துகின்றனர்.இதையறிந்த விஷால் குமாரின் பெற்றோர், ஹிந்து சம்பிரதாயப்படி திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஜூன் 5ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது.முதலில் இதற்கு சம்மதித்த தஹசினா, அதன்பின் குடும்பத்தினர், முஸ்லிம் தலைவர்களின் நெருக்கடிக்கு பணிந்து, திருமணத்துக்கு மறுத்துவிட்டார்.இப்போது, முஸ்லிம் மதத்துக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் பலாத்கார வழக்கு போடுவதாகவும், கொலை செய்வதாக மிரட்டுவதாகவும், விஷால் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.தஹசினா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீராமசேனா அமைப்பினரும், அவருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை