உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம்; சொல்கிறார் சித்தராமையா

தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம்; சொல்கிறார் சித்தராமையா

பெங்களூரு: பா.ஜ.,வின் ஆதிக்கத்தை எதிர்ப்பதால் தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பை கருவியாக பயன்படுத்த விரும்புகிறது,'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.கோவையில் நேற்று நடந்த பா.ஜ., அலுவலக திறப்பு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''தன்னுடைய ஆட்சியின் அவலங்கள் வெளிப்படக்கூடாது என்பதற்காக, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் புதிய பிரச்னைகளை உருவாக்கி, மக்களை திசை திருப்புகின்றனர். மறுசீரமைப்பு என்ற புதிய பிரச்னையை உருவாக்கி, கட்சிகளுடன் முதல்வர் கூட்டம் நடத்து கிறார். தென் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில், ஒரு சீட் கூட குறையாது என, பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், தமிழக முதல்வர், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொய் சொல்லி துரோகம் இழைக்கிறார்,'' எனக் கூறி இருந்தார்.இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறுதிமொழி நம்பகத்தன்மையற்றது.தவறாக வழிநடத்தக்கூடியது. துல்லியமான தகவல் இல்லாததன் காரணமாக அவர் இவ்வாறு பேசியிருக்கலாம். கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களை குறைத்து மதிப்பிடும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம். பா.ஜ.,வின் ஆதிக்கத்தை எதிர்ப்பதால், தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பை ஒரு கருவியாக பயன்படுத்த விரும்புகிறது. முந்தைய தொகுதி மறுசீரமைப்பு பணிகள் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நியாயம் அளிப்பதாகவும், தென் மாநிலங்களின் வளர்ச்சி முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் இருந்தது. தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது. தற்போது உள்ள அளவை அப்படியே தொடர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சித்தராமையா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 28, 2025 12:22

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. அவர்கள் ஏதோ பேசிக் கொண்டு மறந்து போய் இருந்தார்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தி உண்மையிலேயே மாற்ற முடிவெடுத்து விட்டார்கள். நன்றாக கவனிக்கவும் மத்திய அரசு அனைத்தையும் மாற்றி விட்டது. பாராளுமன்றத்தை கூட மாற்றி விட்டார்கள். இந்த தொகுதி மறு சீரமைப்பு தான் மிச்சம் இருக்கிறது. இதை மட்டும் செய்து விட்டால் பாஜக அரசு கை வைக்காத துறையே இல்லை என்ற நிலை வரும். நன்றி தமிழகம்.


ஆரூர் ரங்
பிப் 28, 2025 11:51

இமாச்சல், பஞ்சாப்,ஜார்கண்ட் போன்ற ஹிந்தி பேசும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள்தான் ஆள்கின்றன. சும்மா கதை விடக்கூடாது. குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தையே ஏற்காத முஸ்லிம் கிருஸ்தவர்கள் அதிகமுள்ள இடங்களில் ஹிந்து வேட்பாளர்களை நிறுத்த உங்களுக்கு மனம் வராது.


தாமரை மலர்கிறது
பிப் 28, 2025 00:07

மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், உபிக்கு கூடுதலாக அறுபத்திமூன்று சீட்கள் கிடைக்கும். கர்நாடகாவிற்கு பதிமூன்று சீட்கள் கிடைக்கும். தமிழகத்திற்கு பத்து சீட்கள் கிடைக்கும். பிஹாருக்கு முப்பத்தியொன்பது சீட்கள் கூடுதலாக கிடைக்கும். மத்தியபிரதேசம் இருபத்திமூன்று சீட்கள் கிடைக்கும். பிஜேபி மிக எளிதாக மெஜாரிட்டி பெறும் . தற்போது குறைந்த சீட்கள் கொடுக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் வடமாநிலங்களுக்கு நல்லது நடக்கும். இதனால் தமிழகத்திற்கு எந்த கேடும் இல்லை. இது தான் உண்மையான சமூக நீதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை