விஜயுடன் பேச்சு: தேவகவுடா தகவல்
ஹாசன்: ''தமிழக முதல்வர் விஜயுடன் காவிரி நதி நீர் பிரச்னை குறித்து விரைவில் விவாதிப்பேன்,'' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறி உள்ளார். இது குறித்து, ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி வங்கதேச பிரிவினையின் போது, பிரதமராக இருந்த இந்திரா பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தினார். இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போதே, எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, மூன்று நாடுகளுக்கு இடையே போர் நடக்கிறது. எனவே, அனைத்து சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டு, முதல்வர் சித்தராமையா பேச வேண்டும். இது போன்ற சமயத்தில் பிரதமர் மோடியை இழிவாக பேசுவதை அவர் தவிர்க்கவும். வரலாறு தெரிந்து அவர் பேச வேண்டும். தமிழகத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஆகியோரின் கட்சிகளை கடந்து, ஒரு நடிகரின் கட்சி வெற்றி பெற்றது பெருமைப்பட வேண்டிய விஷயம். தமிழக முதல்வர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள். காவிரி பிரச்னை குறித்து அவரிடம் விரைவில் விவாதிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.