உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேகதாதுவில் அடிக்கல் நாட்டப்படும்

 அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேகதாதுவில் அடிக்கல் நாட்டப்படும்

மாண்டியா: ''அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும்,'' என, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் செலுவாராயசாமி கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டி: மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு, 12,500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. காவிரி நீர் பிரச்னைக்கு மேகதாது திட்டமே நிரந்தர தீர்வு. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் மேகதாது திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். தமிழகத்திற்கு தற்போது திறந்துவிடப்படும் நீரின் புள்ளிவிபரங்களை தற்போது வெளியிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ