உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கார் மீது பைக் மோதி மூவர் பலி

 கார் மீது பைக் மோதி மூவர் பலி

கதக்: கார் மற்றும் பைக் மோதியதில் மூவர் உயிரிழந்தனர். கதக் மாவட்டம் முன்டரகி தாலுகா, மேவுன்டி கிராமம் அருகே நேற்று முன்தினம் காலை, பைக் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த கார் மீது மோதியது . பைக்கில் இருந்த சிவப்பா காட்லி, 35, முத்தப்பா முதுகன்னவர், 32, ஆனந்த் லட்சுமேஸ்வரமடா, 29, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இம்மூவரும் முன்டரகி தாலுகாவின், ஜந்த்லி கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பணி நிமித்தமாக, முன்டரகிக்கு சென்று விட்டு ஒரே பைக்கில் ஊருக்கு திரும்பும் போது, விபத்து நடந்துள்ளது. பைக் ஓட்டியவரின் அதிவேகமே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்த முன்டரகி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டனர். இது தொடர்பாக, போலீ சார் வழக்கு பதிவு செய் துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை