உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வரும் 19ல் பெங்களூரு போராட்டம் போக்குவரத்து சங்கம் அறிவிப்பு

 வரும் 19ல் பெங்களூரு போராட்டம் போக்குவரத்து சங்கம் அறிவிப்பு

பெங்களூரு: ஜன., 29ம் தேதி நடக்கவிருந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், வரும் 19ம் தேதி நடக்கிறது. கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள், நிலுவையில் உள்ள 36 மாத ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 29 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன., 28 ம் தேதி மாலை சங்க தலைவர் அனந்த சுப்பாராவ் மாரடைப்பால் காலமானார். இதனால், 29 ம் தேதி நடக்கவிருந்த பெங்களூரு போராட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 19ம் தேதி காலை 10:00 மணிக்கு பெங்களூரு சுதந்திர பூங்காவில் பெங்களூரு போராட்டம் நடத்தப்படும் என்று அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை