உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  32 ஏரிகளில் நீரின் தரம் மிகவும் மோசம்

 32 ஏரிகளில் நீரின் தரம் மிகவும் மோசம்

பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஜக்கூர் ஏரி, எலஹங்கா ஏரி, எடியூர் ஏரி, உத்தரஹள்ளி ஏரி உள்ளிட்ட, 32 ஏரிகளில் உள்ள நீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கையை ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் தீவிரமாக எடுத்து கொண்டார். ஏரிகளின் நிலை குறித்தும், அவற்றை துாய்மைப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். இப்பணியை மேற்கொள்ள, ஜி.பி.ஏ., ஊழியர்களுடன் பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய அதிகாரிகளும் இணைந்து செயல்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ