உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாஷிங் மெஷினை இயக்கிய பெண் மின்சாரம் தாக்கி பலி

 வாஷிங் மெஷினை இயக்கிய பெண் மின்சாரம் தாக்கி பலி

மாதநாயக்கனஹள்ளி: பெங்களூரு ரூரல் கவுடனஹள்ளியில் வசிப்பவர் சேத்தன், 32. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி சுஜாதா, 30. நேற்று காலையில் துணி துவைக்க வாஷிங் மெஷினை சுஜாதா இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இறந்தார். மாதநாயக்கனஹள்ளி போலீசார் முதற்கட்ட விசாரணையில், மின்சாரம் தாக்கியே சுஜாதா இறந்தது தெரிந்தது. ஆனால் சுஜாதாவின் தந்தை பாண்டுரங்கய்யா, மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக, போலீசில் புகார் செய்தார். திருமணம் ஆன இரண்டு மாதங்களில் இருந்தே கணவன், மனைவி இடையில் குடும்ப தகராறு இருந்தது. கணவரிடம் கோபித்து கொண்டு, கடந்த ஜனவரியில் சுஜாதா எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரை சமாதானப்படுத்தி 20 நாட்களுக்கு முன்பு தான் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். தற்போது அவர் இறந்து உள்ளார். அவரது கணவர் சேத்தன் மீது சந்தேகம் உள்ளது என்று புகாரில், பாண்டுரங்கய்யா குறிப்பிட்டு உள்ளார். புகாரின்படி விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை