உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குட்டி ஈன்ற வரிக்குதிரை மரணம்

 குட்டி ஈன்ற வரிக்குதிரை மரணம்

மைசூரு: மைசூரு மிருகக்காட்சி சாலையில், 'பிரச்சி' என்ற வரிக்குதிரை, கடந்த 4ம் தேதி பெண் குட்டியை ஈன்றது. நலமாக இருந்த பிரச்சிக்கு, திடீரென நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரச்சியின் மறைவுக்கு உயிரியல் பூங்கா நிர்வாகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பிறந்த பெண் குட்டி வரிக்குதிரையை கால்நடை மருத்துவர்கள், ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். உயிரிழந்த பிரச்சி, கடந்த 2018 ல் இஸ்ரேலின் ராமத் கானில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த வரிக்குதிரை இதுவரை ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. இதுபோன்று ஜன., 28ல், 25 வயதான ஒட்டகச்சிவிங்கி யுவராஜா, வயது மூப்பு காரணமாக மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை