உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை உயர்த்தியது எஸ்.பி.ஐ.,

வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை உயர்த்தியது எஸ்.பி.ஐ.,

புதுடில்லி:எஸ்.பி.ஐ., வங்கி, அதன் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்திஉள்ளது. இதையடுத்து, கடனுக்கான தவணைத் தொகை அதிகரிக்கும். இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.'ரெப்போ' வட்டி விகிதத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை, வங்கிகள் உடனே அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.சி.எல்.ஆர்., விகிதத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. வங்கிகள் எம்.சி.எல்.ஆர்., விகிதத்துக்கு குறைவாக வட்டி வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக, ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் செயல்பாட்டு செலவு கள், லாபம் என பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது எம்.சி.எல்.ஆர்., விகிதத்தை மாற்றிஅமைக்கின்றன. எம்.சி.எல்.ஆர்., விகிதங்களை பொறுத்தே வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட சில்லரை கடன்களுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ