உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு

அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு

மும்பை:கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 9,379 கோடி ரூபாய் குறைந்து, 51.14 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 9,379 கோடி ரூபாய் குறைந்து, 51.14 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது-.இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 43,492 கோடி ரூபாய் குறைந்து 51.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டுக்கான வாரத்தில், தங்க கையிருப்பு 3,004 கோடி ரூபாய் சரிந்து 3.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி