வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அவர்கள், பொதுமக்கள் பக்கம் நின்று பேச வேண்டுமே தவிர, தனியார் வங்கியின் செய்தி தொடர்பாளர் போல் பேசுவது ஏற்புடையதா ? குறைந்தபட்ச சராசரி இருப்பை நிர்ணயித்துக் கொள்ள, வங்கிகளுக்கு சுதந்திரம் இருப்பினும், அதில், சற்றாவது, நியாய தர்மம் வேண்டாமா? ஏற்கனவே, இருந்த குறைந்தபட்ச சராசரி இருப்பு விகிதமே சற்று அதிகம் தான். இப்போது அறிவித்துள்ள, சராசரி இருப்பு விகிதம் மிக மிக அதிகம். வேண்டுமானால், இந்த தொகையை அந்த வங்கியின் PREMIUM SERVICE பிரீமியம் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு வேண்டுமானால் வைத்து கொள்ளட்டும். சிறிய நகரில் குடியிருந்தால், அவர் லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் "குறைவான சராசரி இருப்பு போதும் என்றும், பெரிய நகரங்களில் வசிப்பவர், குறைவாக சம்பாதிப்பவராக இருந்தாலும், "அதிகமான தொகை சராசரி இருப்பு வேண்டும்" என்று அளவுகோல் வைப்பது சரியல்ல. பொது வாடிக்கையாளருக்கு, அனைத்து தனியார் வங்கிகளிலும், சிறிய நகரமோ, பெரிய நகரமோ, மாத இருப்பு அதிகபட்சமாக Rs.5,000 ஐந்தாயிரம் தாண்டக்கூடாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அவர்கள் தெரிவித்து, அதுற்குண்டான RBI Order அறிவிக்கையை வெளியிட வேண்டும். அனைவருக்கும் வங்கி சேவை என்னும் மத்திய அரசின் "தாரக மந்திரம்" மெய்ப்பட வேண்டும். குறைந்தபட்ச சராசரி இருப்பு பராமரிக்க வேண்டும் என்ற பெயரில், அளவுக்கு அதிகமான தொகையை நிர்ணயித்து, வங்கி சேவை, பொதுமக்களுக்கு மறுக்கப்படக் கூடாது . நன்றி