டாடா கெமிக்கல்ஸ் தலைமை பதவி: சந்திரா விலகல்
மும்பை : டாடா கெமிக்கல்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அறிவித்து உள்ளார்.இயக்குநர்கள் குழுவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், 'இன்று முதல் டாடா கெமிக்கல்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.'தற்போதைய மற்றும் எதிர்கால பொறுப்புகளை கருத்தில் கொண்டு விலக முடிவு செய்துள்ளேன்' என தெரிவித்துள்ளார். இதையடுத்து, டாடா கெமிக்கல்ஸ் புதிய தலைவராக பத்ம நாபனை, இயக்குநர்கள் குழு நியமித்து உள்ளது. நாளை அவர் பொறுப்பை ஏற்க உள்ளார்.