இந்த வாரம் தொடங்கும் 3 ஐ.பி.ஓ., வெளியீடுகள்
மேற்காசிய போர் பதற்றம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, ஐ.பி.ஓ., சந்தை மீண்டும் பரபரப்பாகி வருகிறது. இந்த வாரம், 'வாட்டர்வேஸ் லீஷர் டூரிசம், அத்வித் ஜுவல்ஸ், சி.எஸ்.எம்., டெக்னாலஜீஸ்' ஆகிய மூன்று நிறுவனங்களின் ஐ.பி.ஓ., தொடங்குகின்றன. இது மட்டுமல்லாமல், என்.எஸ்.இ., நிறுவனம் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு, வரைவு ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. மேலும், 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனம் 38,000 கோடி ரூபாய்க்கு ஐ.பி.ஓ., வெளியிட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. 'செப்டோ, எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மெண்ட்' போன்ற நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வெளியிட தயாராகின்றன.