உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  புதிய பங்கு வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்திய 5 துறைகள்

 புதிய பங்கு வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்திய 5 துறைகள்

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் களைகட்டி வரும் நிலையில், நடப்பாண்டில் ஐந்து துறைகள் மட்டுமே இதில் பாதிக்கும் மேலான பங்களிப்பை வழங்கியுள்ளதாக, 'மோதிலால் ஓஸ்வால்' நிறுவனத்தின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அதன் முக்கிய அம்சங்கள்:

கடந்த 2024ம் ஆண்டு ஐ.பி.ஓ., வெளியீட்டில் வாகனத் துறை முன்னணியில் இருந்த நிலையில், நடப்பாண்டில் நிதி சேவை நிறுவனங்கள் முதன்மை சந்தையை கைப்பற்றியுள்ளன.இரண்டு ஆண்டுகளில் வெளியான ஐ.பி.ஓ.,க்களில் சராசரியாக 26.60 மடங்கு அதிகமாக முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, மூலதனப் பொருட்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இ - - காமர்ஸ் துறைகளுக்கு முதலீட்டாளர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.கடந்த ஆண்டில் 18 சதவீதம் நிதி திரட்டிய டெலிகாம், யூட்டிலிட்டி மற்றும் தனியார் வங்கி துறைகள், நடப்பாண்டில் ஒரு ஐ.பி.ஓ., கூட வெளியிடவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ