உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஷார்ட் செல்லிங் நடைமுறை ஆய்வு செய்ய நிபுணர் குழு

ஷார்ட் செல்லிங் நடைமுறை ஆய்வு செய்ய நிபுணர் குழு

ப ங்குச்சந்தையில், 'ஷார்ட் செல்லிங்' நடைமுறை குறித்து விரிவாக ஆய்வு செய்ய, ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என, செபியின் தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். முன்பேர வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், தங்களிடம் இல்லாத பங்குகளை அதிக விலைக்கு விற்று, பின் குறைந்த விலைக்கு வாங்கி லாபம் ஈட்டுவர். இந்த நடைமுறை மற்றும் எஸ்.எல்.பி., எனப்படும் பங்குகளை கடன் கொடுத்து வாங்குவது உள்ளிட்டவை, உலகளாவிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பங்குச்சந்தைகளில் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என செபி கருதுகிறது. எனவே, இந்த கட்டமைப்புகளை மேம்படுத்த, இந்த ஆய்வு தேவைப் படுவதாக செபி தலைவர் தெரிவித்துள்ளார். * ஷார்ட் செல்லிங் நடைமுறை கடந்த 2007ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரிய அளவில் மாற்றப்படவில்லை * எஸ்.எல்.பி., நடைமுறை கடந்த 2008ல் துவக்கப்பட்டு பின் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை