உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  அன்னிய செலாவணி கையிருப்பு உச்சம்

 அன்னிய செலாவணி கையிருப்பு உச்சம்

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. கடந்த ஜனவரி 23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு 709.413 பில்லியன் டாலராக, அதாவது 64.56 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, முந்தைய வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு 63.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2௩ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்க கையிருப்பு 51,300 கோடி ரூபாய் உயர்ந்து 11.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை