இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு 3 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்வு
இந்தியாவில் இ.டி.எப்.,களில் மக்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாக, 'ஜீரோதா பண்டு ஹவுஸ்' தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, இ.டி.எப்.,களில் செய்யப்பட்ட மொத்த முதலீடு 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும்; இது, கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்கு வளர்ச்சி எனவும் ஜீரோதா கூறியுள்ளது.