மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ.,
21-Jan-2026
'ஏ .எஸ்.கே., அசெட் அண்டு வெல்த் மேனேஜ்மென்ட்' நிறுவனம், இந்தியாவில் மியூச்சுவல் பண்டு வணிகத்தைத் துவங்க 'செபி' அனுமதித்துள்ளது. அதன்படி, இந்த நிறுவனம் ஆக்டிவ் ஈக்விட்டி பண்டுகள், பேசிவ் மற்றும் இ.டி.எப்., ஹைபிரிட் பண்டுகள் மற்றும் பிக்சட் இன்கம் / டெப்ட் பண்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்நிறுவனத்தில் இருந்து புதிய என்.எப்.ஓ.,க்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பங்குச் சந்தையில் செயல்பட்டு வரும்'ஏ.எஸ்.கே., நிறுவனம்', இதுவரை அதிக வசதிபடைத்தோருக்கான பி.எம்.எஸ்., மற்றும் ஏ.ஐ.எப்., சேவைகளை வழங்கி வந்தது. தற்போது கிடைத்துள்ள இந்த அனுமதியின் வாயிலாக, சில்லரை முதலீட்டாளர்களும் இந்நிறுவனத்தின் திட்டங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
21-Jan-2026