அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு
மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, ஜூன் 5ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 6,755 கோடி ரூபாய் குறைந்து, 64.75 லட்சம் கோடி ரூபாயானது. முந்தைய வாரத்தில் கையிருப்பு 8,911 கோடி ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், இந்த முறை சரிவு ஏற்பட்டுள்ளது. அன்னிய கரன்சி சொத்துகள் 25,688 கோடி ரூபாய் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=248hm0z2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0