சென்னை ஸ்டார்ட் அப்புக்கு ரூ.4 கோடி நிதியுதவி
சென்னை:சென்னையைச் சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனமான, எம்.ஓ.ஓ.இ.வி., டெக்னாலஜிஸ், மின்சார கனரக வாகன தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 'பிஸ்டேட் அப், இன்ப்ளெக் ஷன் பாயின்ட் வெஞ்சர்ஸ், ஸ்பெக்ட்ரம் இம்பேக்ட்' ஆகிய நிறுவனங்கள் வாயிலாக, 4 கோடி ரூபாய் நிதியுதவியை பெற்றுள்ளது.எம்.ஓ.ஓ.இ.வி., நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தொழிலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது.