உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

வீறுநடை போடும் காளை

வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்றும், சந்தை குறியீடுகள் அதிக உயர்வுடன் நிறைவு செய்தன. அமெரிக்க மத்திய வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதம் 4.25 சதவீதமாக தொடர முடிவு செய்யப்பட்டது. எனினும், டிரம்பின் வரி விதிப்புகளால் பணவீக்கம் உயர்ந்தால், இந்தாண்டு இரண்டு முறை வட்டி குறைப்பிற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது. இதனால், உலகளாவிய சந்தைகள் எழுச்சி கண்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து, ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ஐ.டி., துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டியதால், சந்தை அதிக எழுச்சி கண்டது. நேற்றைய உயர்வால், முதலீட்டாளர்கள் 3 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டினர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் நிப்டி 3.5 சதவீதமும்; சென்செக்ஸ் 3.4 சதவீதமும் உயர்வு கண்டுள்ளன.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 3,239 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.32 சதவீதம் அதிகரித்து, 71.01 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 86.36 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !