குண்டுவெடிப்பு இ மெயில்: மாணவர் கைது
ஜம்மு: டில்லி ஐகோர்ட் வளாக குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்பதாக கூறி, ஹூஜி என்ற பயங்கரவாத இயக்கத்தின் பேரில் இமெயில் அனுப்பியதாக மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்டுவாரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வரும் அந்த மாணவன் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.