உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியை பிரிந்தார் காஷ்மீர் முதல்வர் ஒமர்

மனைவியை பிரிந்தார் காஷ்மீர் முதல்வர் ஒமர்

ஸ்ரீநகர்,: ''கருத்து வேறுபாடு காரணமாக, என் மனைவியைப்பிரிந்து வாழ்கிறேன்'' என, ஜம்மு-காஷ்மீர் முதல்வர்ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா,41,நாட்டின் கவர்ச்சியான அரசியல்வாதிகளில் ஒருவர். 17 ஆண்டுகளுக்கு முன், பாயல் நாத் என்பவரை திருமணம் செய்தார். காஷ்மீர் முதல்வராகஒமர் அப்துல்லா பதவியேற்ற பின், அவரின்மனைவி பாயல், டில்லி நகரிலேயே முகாமிட்டுள்ளார். அதனால், 'முதல்வருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது.தற்போதைக்குப் பிரிந்து வாழும் இவர்கள்,விரைவில் விவாகரத்து செய்வர். அதன்பின்,நசீர் அஸ்லம் என்பவரின் தங்கையை, ஒமர்மணந்து கொள்வார்' என, ஊடகங்கள் செய்திவெளியிட்டன.இந்நிலையில், ஒமர் அப்துல்லா கூறியதாவது:கருத்து வேறுபாடு காரணமாக, நானும், என்மனைவியும் பிரிந்து வாழ்வது உண்மையே.எனது எதிர்காலத் திட்டங்கள் என, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.இதனால், நான் உட்பட என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். என் தனிப்பட்ட வாழ்வில், ஊடகங்கள்தலையிடுவது விரும்பத்தகாத செயல். இதுதொடர்பாக, எனது கருத்தைக் கேட்கமுயற்சிக்காமல், மீண்டும் மீண்டும் இதுபோன்றஅவதூறுகளை, செய்திகளாக வெளியிடுகின்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ