உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதனன்று நடக்கும் குண்டுவெடிப்பு சம்பவங்கள்

புதனன்று நடக்கும் குண்டுவெடிப்பு சம்பவங்கள்

புதுடில்லி: புதன் கிழமை தோறும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்புக்கு முன்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மே 25ம் தேதி புதன் கிழமை அன்றும் டில்லி ஐகோர்ட்டில் குண்டுவெடித்தது. கடந்த ஜூலை 13ம் தேதி மும்பையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பில் 18 பேர் பலியானார்கள் 141 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்ததும் புதன்கிழமை ஆகும். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்ததும் புதன்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து சம்பவங்களுக்கு இடையேயான தொடர்புகளுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்ற போதிலும், அனைத்து சம்பவங்களும் புதன்கிழமை நடந்துள்ளதால், பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமைக்கு பதில் புதன்கிழமையை தேர்ந்தெடுத்துள்ளார்களா என்ற சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை