உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆஸ்திரேலிய மாகாண அமைச்சராக கேரளாவைச் சேர்ந்தவர் பதவியேற்பு

ஆஸ்திரேலிய மாகாண அமைச்சராக கேரளாவைச் சேர்ந்தவர் பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிட்னி: கேரளவைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியா மாகாண அமைச்சராக பதவியேற்றார். கேரளா மாநிலம் கோட்டையத்தைச்சேர்ந்தவர் ஜின்சன் ஆன்டோ சார்லஸ், நர்சிங் படிப்பு படித்துள்ள இவர். 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணம் டார்வின் பகுதியில் வசித்து வருகிறார். டார்வின் பல்கலை. பேராசிரியராக பணியாற்றிய நிலையில், அங்கு வடக்கு மாகாணத்தில் லிபரல் கட்சியில் இணைந்தார். இங்கு கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.இக்கட்சியின் அமைச்சராக ஜின்சன் ஆன்டோ சார்லஸ் பதவியேற்றார். இவருக்கு விளையாட்டு, பலவகை கலாச்சாரம், சுகாதாரம், மாற்றுத்திறனாளிகள் நலம் உள்ளிட்ட ஏழு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவரை போன்று குஜராத்தைச் சேர்ந்த கோடா பட்டேல் என்பவரும் சட்டசபை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivakumar
செப் 10, 2024 22:36

ஆனா ஒரிசாவில் தமிழகத்தை சேர்ந்த பாண்டியன் ஐயா மட்டும் வந்துரவே கூடாது.


பாலா
செப் 11, 2024 00:26

இவர் தேர்தலில் ஜெயித்து வந்தார். அவர் தேர்தல்லையே போட்டியிடாமல் இருந்தார், அவர் கட்சியும் தோல்வியுற்றது. என்னமோ தேர்தலில் ஜெயித்தவரையோ, மேலவைக்கு போட்டியிட்டு ஜெயித்தவரையோ ஆட்சியில் பங்கேற்க விடாமல் தடுத்ததை போல பேசரீங்க.


புதிய வீடியோ