உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி முன் நடிகை ரன்யா ராவ் கதறல்; நட்சத்திர ஹோட்டல் அதிபர் கைது

நீதிபதி முன் நடிகை ரன்யா ராவ் கதறல்; நட்சத்திர ஹோட்டல் அதிபர் கைது

பெங்களூரு : கர்நாடகாவில் தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், நீதிபதி முன் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. ரன்யா ராவிடம் தங்கம் வாங்கிய நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் தருண் ராஜ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விமானத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவை, கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hdqe0i0m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மிரட்டல்

சிறையில் அடைக்கப்பட்ட அவரை, மூன்று நாட்கள் காவலில் எடுத்து, வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரித்தனர். நேற்றுடன் காவல் நிறைவு அடைந்தது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி விஸ்வநாத் கவுடர் முன் ரன்யா ராவை ஆஜர்படுத்தினர். அப்போது, 'விசாரணையின் போது உங்களுக்கு தொல்லை கொடுத்தனரா' என்று நீதிபதி கேட்டார். அதற்கு ரன்யா ராவ், ''எனக்கு தொல்லை கொடுக்கவில்லை: என்னை மிரட்டும் தொனியில் பேசினர். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டால், என்ன ஆகும் தெரியுமா என்று மிரட்டினர். சிலரின் அழுத்தத்தால் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தேன்,'' எனக் கூறி, கதறி அழுதார்.வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல்கள், 'விசாரணையின் போது நாங்கள் ரன்யா ராவை மிரட்டவில்லை. கண்காணிப்பு கேமரா முன் வைத்து தான் அவரிடம் விசாரித்து உள்ளோம்; தேவைப்பட்டால், அந்த காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்' என்றனர்.

குற்றச்சாட்டு

இதையடுத்து, ரன்யா ராவை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, ரன்யா ராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில், கர்நாடகாவின் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா நேற்று சட்டசபையில் குற்றம் சாட்டினார்.பதிலுக்கு, ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு, பா.ஜ., ஆட்சியில் தான் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது என்று, காங்கிரஸ் தலைவர்கள் காட்டமாக பதிலடி கொடுத்தனர். இதனால், ரன்யா ராவ் விவகாரத்தில் அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. ரன்யா ராவ் பயன்படுத்திய மொபைல் போனை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்த போது, ஏராளமான அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் பெயரை பதிவு செய்து வைத்திருந்தது தெரிந்தது. சில அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளுடன் அடிக்கடி அவர் பேசியதும் தெரிந்தது. குறிப்பாக தொழில் அதிபரும், நட்சத்திர ஹோட்டல் உரிமையாளருமான தருண் ராஜ் என்பவரிடம் அடிக்கடி பேசியதும், அவருக்கு தங்கம் கொடுத்ததும் தெரிய வந்தது.தருண் ராஜை நேற்று தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்காததால், தருண் ராஜ் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Subash BV
மார் 11, 2025 14:01

Tip of the iceberg and dramas played by politicians and vvips. NOT UNIQUE TO KARNATAKA. HAPPENING ALL OVER THE COUNTRY BY MISUSING OUR CONSTITUTION. NO CHOICE. GUYS HAVE TO RECTIFY THEMSELVES.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 11, 2025 13:08

இது போன்ற வழக்குகள் முடிவை எட்டுவதில்லையோ ??


अप्पावी
மார் 11, 2025 09:48

கேரளத்து சொர்ணாக்கா ஸ்வப்னா சுரேஷை நாலு வருஷம் முன்னாடி கைது பண்ணினாங்களே.. கேசை இழுத்து மூடியாச்சா?


Mecca Shivan
மார் 11, 2025 10:10

சரியான கேள்வி? அதேபோல சில பல வருடங்களுக்கு முன் திருச்சி கஸ்டம்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தால் பல நூறு கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் காணாமல் போன விவகாரமும் மூடி மறைக்கப்பட்டுவிட்டது .. சாதாரண சம்பள வாங்கும் தனிநபரோ அல்லது சிறு குறு வியாபாரியோ வருமான வரி ஒரு ருபாய் குறைத்து கட்டி இருந்தால் கூட உடனே நோட்டீஸ் வரும் .. அதுவும் GST அலுவலகம் கிஸ்தி அலுவலகமாகவே மாறிவிட்டது ..ரிட்சி ஸ்ட்ரீட், பிராட்வே பாரிஸ் கார்னெர் பகுதியில் இன்றளவும் பில் இல்லாமல் வியாபாரம் படு ஜோராக நடைபெறுகிறது


अप्पावी
மார் 11, 2025 09:44

நல்லவேளை, எனக்கே தெரியாமல் தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டிட்டாங்க. நான் அப்பாவின்னு கதறலை.


Kanns
மார் 11, 2025 09:15

Dramas. Let there be No Mercy to Women Criminals. CaseNewsVote Hungry Criminals Supporting them be Arrested


Nagarajan D
மார் 11, 2025 08:48

இந்த விசாரணை முடிவு 3035 ல் முடியுமா? பிறகு வழக்கு நீதிமன்றத்தில் சுமார் 100 வருடம் நடக்கும்... கேவலமான சட்டத்தால் நாடு நாசமாகிப்போகிறது


Iyer
மார் 11, 2025 06:59

இவரை வெகு தீவிரமாக விசாரித்து இவருக்கு உள்ள அரசியல்வாதிகளின் தொடர்பை கண்டறியவேண்டும். சம்பந்தப்பட்ட அணைத்து அரசியல்வாதிகள் அனைவரையும் கைது செய்து அனைவரின் உடமைகளை பறித்து விடுவது அவசியம்.


N.Purushothaman
மார் 11, 2025 06:43

பிரபலமானவர்கள் என்கிற காரணத்தினால் நாம் எந்தவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடலாம் என்கிற மனநிலை மிகவும் ஆபத்தானது ....


Fasterst
மார் 11, 2025 06:26

Security is a priority for Baterybet. The platform integrates advanced encryption protocols, safeguarding user data and transactions from unauthorized access. Additionally, Baterybet offers two-factor authentication 2FA as an extra layer of protection, giving users greater confidence in their account security. s://baterybet.run/baterybet-login/


Indhuindian
மார் 11, 2025 05:41

இப்போ அஷுது என்ன பண்றது அதுவும் நடிகை அஷுதால் யாரவது நம்புவார்களா? கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அனுபவி ராஜா அனுபவி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை