வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்க போனீங்க
பரிதாபாத்: ஹரியானாவில் பசுவை கடத்திச் சென்றதாக புரளி கிளம்பியதை அடுத்து, பள்ளி மாணவரை 25 கி.மீ., துாரம் காரில் துரத்திச் சென்று, பசு பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹரியானா மாநிலத்தின் பரிதாபாதைச் சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா, 19. பிளஸ் 2 படித்து வந்த இவர், தன் நண்பர்களுடன் உணவு சாப்பிட, கடந்த மாதம் 23ம் தேதி இரவு காரில் சென்றார். ஆரியனுடன், ஹர்ஷத், ஷங்கே மற்றும் இரண்டு இளம் பெண்கள் காரில் சென்றனர்.இதற்கிடையே, பரிதாபாத் அருகே காரில் பசு மாடுகள் கடத்தப்படுவதாக, பசு பாதுகாப்பு கும்பலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லி - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கார்களை அக்கும்பல் கண்காணித்தது. அப்போது, அவ்வழியாக சென்ற ஆரியனின் காரில் பசு கடத்தப்படுவதாக எண்ணி, அக்கும்பல் துரத்திச் சென்றது.
எங்க போனீங்க