உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 சட்டசபை, 1 மேலவை தொகுதிக்கு இடைத்தேர்தல்

3 சட்டசபை, 1 மேலவை தொகுதிக்கு இடைத்தேர்தல்

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட, மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.எல்.சி., வெற்றி பெற்றதால், இவர்களின் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.ராம்நகர், சென்னபட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., குமாரசாமி, மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஹாவேரியின், ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை, ஹாவேரி லோக்சபா தொகுதியிலும்;, சன்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., துக்காராம், பல்லாரி லோக்சபா தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.அதேபோன்று, மேலவையின் தட்சிண கன்னடா - மைசூரு தொகுதி பா.ஜ., உறுப்பினராக இருந்த கோட்டா சீனிவாச பூஜாரி, உடுப்பி - சிக்கமளூரு லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.நால்வரும் எம்.பி.,க்களானதால், மூன்று சட்டசபை தொகுதிகள், ஒரு மேலவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும். இடைத்தேர்தலில், 'சீட்' பெற, இப்போதே முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள், 'துண்டு' போட துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை