உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதம் சார்ந்தவர்களே கோவிலை நிர்வகிக்க ஐகோர்ட் உத்தரவு

மதம் சார்ந்தவர்களே கோவிலை நிர்வகிக்க ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: 'கோவில்கள் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு என்பது மதம் தொடர்பானவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு தொடர்பில்லாத வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது' என, வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் கோவில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சை குறித்த வழக்குகளை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு:உத்தர பிரதேசத்தில், குறிப்பாக மதுரா மாவட்டத்தில், கோவில் நிர்வாகம் தொடர்பாக, 197 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளில், கோவில்களை நிர்வகிக்கும், 'ரிசீவர்' என்ற நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் பொறுப்பு அதிகாரியாக, வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.இந்த பதவியை கவுரமாகக் கருதும் அவர்கள், அந்த கோவில் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண விடாமல் தடுக்கின்றனர். இதனால், கோவில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சை நீடித்துக் கொண்டே இருக்கிறது. இது, பல கோவில்கள் தொடர்பான வழக்கில் நடந்து வருகிறது.கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு, வேதம், சாஸ்திரம் அறிந்த, மதம் தொடர்பானவர்களிடமே இருக்க வேண்டும். அப்போதுதான், அந்த கோவில் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த விஷயத்தில் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான வழக்குகளில் இந்த உத்தரவை செயல்படுத்துவதை, மாவட்ட நீதிபதி உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R.Varadarajan
செப் 01, 2024 17:12

இந்து திருக்கோவில்கள் மற்றும் இந்து அறக்கட்டளைகளின் கணக்கு வழக்குகளை ஆரய்ந்து சரிபார்க்க ஆய்வாளர்களாக செயல்பட நியமிக்கப்பட்ட இந்து அறநிலையத்துறை , கிழக்கிந்திய கம்பெனி போலவும் , ஒட்டகம் கொட்டகைக்குள் தலையை நுழைத்த்து போல் புகுந்து இந்து வாழ்க்கை முறை , ஆகம விஷயங்களில் தலையிட்டு கோவில்களை இடித்தும் ,அதன் செல்வங்களை கொளள்ளை அடிக்கும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிரது. தேனெடுப்பவன் புறங்கை நக்குவது போல உள்ளது அதன்செயல். .அது இந்து வாழ்க்கை முறைக்கு வேட்டு வைத்து மதமாற்றத்திற்கும் உறுதுணையாக உள்ளது. ஊறுகாய் ஊறினது போதும். இனியாவது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தீதித்துறை உறக்கத்தில் இருந்து விழித்து பகவான்ஶ்ரீ கிருஷ்ணன் பாஞ்சாலியின் மானத்தைக்காத்தது போல துச்சாதனர்கள் கையில் சிக்கித்தவிக்கும் இந்து கோவில்களை சிறுபானமையினரை காக்கும் தெய்வமாக செயல் படும் நாத்திக அரசுகள், மற்றும் கொள்ளயர்களான அரசியல்வாதிகளிடமிருந்து விடுவித்து காக்கவேண்டும்.


GMM
செப் 01, 2024 09:59

ராணுவ வீரர்கள் தான் எல்லையை பாதுகாக்க முடியும். இந்து மத சடங்கு பின்பற்றி வாழ்ப்பவருக்கு தான் கோவிலை நிர்வகிக்க, பராமரிக்க அனுமதிக்க வேண்டும். மந்திரி, துறை தலைவர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை உத்தரவு அமுலில் இருக்க வேண்டும். காரணம் வழிபாடு முறை மாறுபடுகிறது.சிறந்த தீர்ப்பு. தமிழக இந்து அறநிலைய துறை திருந்துமா? கோவிலினுள், கோவிலை சுற்றி அந்நிய மதத்தினர் வழிபாடு, குடியிருப்பு, வியாபாரம் கூடாது. நாட்டில் உள்ள பெரிய கோவிலை பொது விதிகள் வகுத்து, மத்திய அரசு நிர்வகிக்க வேண்டும். இந்துக்கள் தான் விரும்பும் கோவிலில் உறுப்பினர் ஆக வேண்டும். மாநில/மாவட்ட பொறுப்பில் கோவில் நிர்வாகம் கூடாது.


சாரதி
செப் 01, 2024 06:38

சாப்பிடுவதற்கு கொஞ்சமாவது தயக்கம் இருக்கும். இல்லேன்னா சோம்நாதபுரம் ஆயிடும்.


Kasimani Baskaran
செப் 01, 2024 06:22

அறங்காவலர் குழு மட்டுமே கோவில் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியும். கோவிலில் முறைகேடு, நிதி மோசடி நடந்து அது அரசுக்கு புகாராக கொடுக்கப்பட்டு இருந்தால் புலனாய்வுக்குப்பின் நீதிமன்ற அனுமதியுடன் அரசு கோவிலுக்குள் வந்து நிலமயையை சரி செய்யும் வரை நிர்வாகத்தில் பங்கு பெறலாம். மற்றப்படி கோவில்களை நிர்வகிக்க வெளியாள்களுக்கு உரிமை இல்லை.


NRI
செப் 01, 2024 03:44

Very Good decision. When this will be implemented in tamil nadu?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை