கல்யாண கர்நாடகாவில் ரூ.5,000 கோடியில் பணி
மாநில வளர்ச்சி மற்றும் பிராந்திய பகுதிகளின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆய்வு நடத்த பேராசிரியர் கோவிந்த் ராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு அறிக்கையின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க பொருத்தமான திட்டம் கொண்டு வரப்படும் கல்யாண கர்நாடகா மண்டல வளர்ச்சி ஆணையம் சார்பில், கல்யாண கர்நாடகா பகுதியில் 5,000 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கு நடக்கும் பணிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் பயலுசீமே, மலேநாடு, கரவாளி பகுதி வளர்ச்சி ஆணையங்களுக்கு 83 கோடி ரூபாய் ஒதுக்கீடு மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக சீர்திருத்த திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் நோக்கில், எல்லை பகுதி மேம்பாட்டு ஆணையம், திட்டமிடல் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.