உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓங்கி அறைந்த ஓலா டிரைவர்; 30 ரூபாய் வேதனையில் இழந்தது 30,000 ரூபாய்!

ஓங்கி அறைந்த ஓலா டிரைவர்; 30 ரூபாய் வேதனையில் இழந்தது 30,000 ரூபாய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு ; கர்நாடகாவில் புக்கிங்கை கேன்சல் செய்த கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய ஓலா ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஓலா ஆட்டோ

கடந்த 3ம் தேதி மகடி சாலையில் இருந்தவாறு தனது ஆண் நண்பருடன் வெளியே செல்ல மாணவி ஒருவர் ஓலா ஆப் மூலம் ஆட்டோவை புக் செய்துள்ளார். அதே சமயத்தில், அவரது நண்பனும், தெரியாமல் மற்றொரு ஆட்டோவை புக் செய்து விட்டார். இரு ஆட்டோக்களும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்த நிலையில், மாணவி புக் செய்த முத்துராஜ் என்பவரின் ஆட்டோவை ரத்து செய்துள்ளார்.

தாக்குதல்

பின்னர், மற்றொரு ஆட்டோவில் இருவரும் ஏறி அமர்ந்த நிலையில், சவாரியை ரத்து செய்த ஆத்திரத்தில் முத்துராஜ், அந்த மாணவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவியை டிரைவர் முத்துராஜ் அறைந்துள்ளார். இது அனைத்தையும் மாணவி வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

வழக்குப்பதிவு

இதையடுத்து, டிரைவர் முத்துராஜை 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் முடிவு செய்தனர்.

ரூ.30,000 போச்சே

இது குறித்து போலீசார் கூறியதாவது: ஆட்டோ புக்கிங்கை ரத்து செய்ததால், பொறுமை இழந்த டிரைவர் முத்துராஜ் இப்படி நடந்து கொண்டுள்ளார். அநேகமாக, அவர் 4 நாட்கள் நீதிமன்ற காவலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை தயார் செய்யவே நான்கைந்து தினங்கள் கடந்து விடும். ஆட்டோ புக்கிங்கை ரத்து செய்ததால், முத்துராஜுக்கு வெறும் ரூ.20 முதல் ரூ.30 வரையிலேயே செலவாகியிருக்கும். தற்போது, கோபத்தினால் நிகழ்ந்த இந்த சம்பவத்தினால், வக்கீல் செலவு உள்பட ஜாமின் பெறுவதற்கு மட்டும் அவர் ரூ.30,000 வரையில் செலவு செய்ய வேண்டியிருக்கும், எனக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Venkatesan T
செப் 08, 2024 13:11

ஆட்டோ டிரைவர் மாறவே இல்லை. நீங்கள் எந்த ஆட்டோ ஸ்டாண்டிற்குச் சென்றாலும், டிரைவர் உங்களிடம் இரு வழி சார்ஜில் கட்டணம் வசூலிப்பார், பின்னர் அவர் மற்றவர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடிப்பார்.


Saravana C
செப் 07, 2024 22:37

வணக்கம் நான் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர் உண்மையான நிலவரம் என்னவென்று யாருக்காவது தெரியுமா அந்த வாடிக்கையாளர் பெண் மூன்று ஆட்டோக்கள் புக் செய்துள்ளனர் ஓலா உபர் மற்றும் ராபிடோ மூன்று ஆட்டவும் லொகேஷன் வந்து அடைந்ததும் இரண்டு புக்கிங் கேன்சல் செய்துவிட்டு மற்றொன்று ஆட்டோவில் பயணம் செய்ய முயன்ற போது அந்த டிரைவர் வெகு தூரம் இருந்து வந்து பிறகு புக்கிங் கேன்சல் ஆனதால்அந்தப் பெண்ணிடம் சென்று ஏன் ஒரு ஆட்டோ புக் செய்து பயணம் செய்தால் ஆகாதா ஏன் இத்தனை ஆட்டோ புக் செய்து எங்கள் டைம் வேஸ்ட் செய்றீங்க கேட்ட பிறகு அந்தப் பெண் நான் தினமும் மூன்று ஆப்பில் புக் செய்வேன் எந்த ஆட்டோ பஸ்ட் வருகிறது அதில் சென்று விடுவேன் என்று கூறிய பிறகுதான் கோபம் கொண்டு டிரைவர்அந்தப் பெண்ணை தகாத வார்த்தையில் பேசி உள்ளார் இங்கே இரு தரப்பிலும் தப்பு உள்ளது இங்கே கமெண்ட் செய்யும் அனைத்து நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் டிரைவர் செய்தது தவறுதான் ஆனால் என்ன நடந்தது தெரியாமல் நிறைய பேருக்கு கமெண்ட் பண்றீங்க ஓட்டுனராக பணிபுரிவது அவ்வளவு எளிதல்ல ஒரு நாளைக்கு 50 புக்கிங் எடுத்தால் 20 புக்கிங் கஸ்டமர் லொகேஷன் அடைந்தபின் கேன்சல் ஆகும் பெங்களூரில் உள்ள டிராபிக்கிற்கு ஒரு நாளைக்கு ஆட்டோ ஓட்டி பாருங்க எங்களோட கஷ்டம் தெரியும் எங்களோட கோபம் எதுக்கு இவ்ளோ இருக்குன்னு உங்களுக்கு புரியும் ஆட்டோ புக் பண்ணும் அனைத்து வாடிக்கையாளரும் ஒரு ஆட்டோ புக் செய்து பயணம் செய்யுங்கள்


Ramesh
செப் 08, 2024 08:50

கருத்தெல்லாம் தெளிவா விலாவாரியாகத்தான் இருக்கு. ல தூக்கிக் செய்வது பிரயாணிகளுக்கு செய்து கொள்ள பட்டிருக்கும் வசதி. ஓங்க இஷ்டப்படி நீங்க கேன்சல் செய்வீங்களாம் ஆனால் பிரயாணிகள் செய்யக்கூடாதாம். இது பொதுமக்களுக்கான பிரயாண வசதி. உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் ஓலாவிடம் இல்லாமல் தனியாக ஆட்டோ ஓட்டுக்கள் இல்லை என்றால் இதற்க்கான தீர்வை ஓலாவிடம் கேட்டு பெறுங்கள். அதை விட்டுவிட்டு பயனாளிகளை குறை சொல்வது வன்மத்தின் உச்ச கட்டம்.


Prabhu
செப் 07, 2024 20:53

அந்த டிரைவர் மேல தப்பு இல்ல அந்த பொண்ணு மேல தான் தப்பு வண்டி சீக்கிரமா வரல அப்படின்னு தான் அந்த பொண்ணு கேன்சல் பண்ணுச்சு பெங்களூர் டிராபிக்ல வண்டி எப்படி சீக்கிரம் வரும். அப்போ டிரைவர் கேன்சல் பண்ண பரவால்லையா


S.Lakshminarasimhan
செப் 07, 2024 20:41

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.


Vinayagam
செப் 07, 2024 19:07

புக்கிங் பன்னிட்டு வேண்டாம் என்றால் அதற்குறிய பணத்தை கட்டியிருந்தால் இந்த நாடகமே தேவையில்லை. அடுத்த ஆட்டோ டிரைவர் ஏன் மௌனமாக இருந்தார். அதே சமயத்தில் இருவருக்கும் பொறுமையும் வேண்டும்.


sankaran
செப் 07, 2024 18:51

எல்லாத்துக்கும் டிஜிட்டல் தான் காரணம் ... ஒழுங்கா நாடு போய்க்கொண்டு இருந்தது கேஷ் குடுத்து...


வாய்மையே வெல்லும்
செப் 07, 2024 19:53

திருட்டுத்தனத்துக்கும் டிஜிட்டலுக்கும் ஆவாது.. வாழ்க திருட்டு திராவிடம் வளர்க கள்ளப்பணம் என்கிறார் திராவிட ஆதரவாளர்


Pandi Muni
செப் 07, 2024 20:39

திருட்டு திராவிடனுக்கு வச்சான் பாரு ஆப்பு.


D.Ambujavalli
செப் 07, 2024 18:50

இதே, புக் செய்து காத்திருக்கையில் கடைசி நிமிஷத்தில் ரத்து செய்துவிட்டு, முக்கியமாகச் செல்ல வேண்டிய இடம் செல்ல முடியாமல் தவிக்க வைக்கிறார்களே அவர்கள் செய்கைக்கும் நம் தலையில்தான் அடித்துக்கொள்ள வேண்டும்.


Ananth
செப் 07, 2024 18:32

Uncivilized Not the driver the Girl is.Of course the driver actions are completely wrong.Due to traffic and delays ,Bangalore peoples especially youths are trying to book from multiple apps at the same time and cancel others if some one comes first.This behaviour is uncivilized.


R S BALA
செப் 07, 2024 18:03

ஆட்டோன்னாலே அகம்பாவம்தான் எந்த ஊரானாலும் இதற்க்கு விதிவிலக்கல்ல..ஆயிரத்தில் ஒருவன் எங்காவது ஒருவர் நல்லகுணத்துடன் இருப்பார்..


Kumar Kumzi
செப் 07, 2024 17:00

அந்த பெண்ணின் மீதும் தவறு இருக்கு இவள் பாய்ப்பிரண்டிடம் கேட்டுட்டு புக் பண்ணிருக்கணும்


புதிய வீடியோ