உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாயை கல்லால் தாக்கி கொன்ற மகன் கைது

தாயை கல்லால் தாக்கி கொன்ற மகன் கைது

பாலக்காடு; பாலக்காடு அட்டப்பாடியில், தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி புதுார் அரளிக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ரேசி, 55. இவரது மகன் ரகு 38. ரகுவின் மனைவி செல்வி. குடிபோதையில் ரகு அடிக்கடி வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.இந்நிலையில், நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த ரகு, மனைவி செல்வியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை தடுக்கச்சென்ற தாய் ரேசியை, தன் கையில் கிடைத்த கல்லால் ரகு, சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் தலையில் ஏற்பட்ட அடியால் ரத்தம் கசிந்து, சம்பவ இடத்திலேயே ரேசி உயிரிழந்தார். சம்பவத்திற்கு பிறகு தப்பி ஓட முயன்ற ரகுவை, அப்பகுதி மக்கள் பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த புதூர் போலீசார், ரகுவை கைது செய்தனர். ரேசியின் உடலை அகளி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்த பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அகளி டி.எஸ்.பி., அசோகன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
பிப் 24, 2025 08:11

குற்றம் செய்தவரை விட குற்றம் செய்ய காரணமானவரையே தண்டிக்க வேண்டும். மதுவால் தமிழகத்தில் நாளும் குற்றச்செயல்கள் . இவற்றுக்கு அரசு எப்போது பொறுப்பெடுக்க போகிறது ? அரசியல் வியாதிகள் , தங்கள் தங்கள் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல் படுவதை எப்போது நிறுத்துவார்கள் ?


புதிய வீடியோ