உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அல் குவைதா ஆதரவு பெண்ணை இன்ஸ்டாவில் தொடர்ந்த 10,000 பேர்

அல் குவைதா ஆதரவு பெண்ணை இன்ஸ்டாவில் தொடர்ந்த 10,000 பேர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'என்னை கைது செய்தது புனித போரின் ஒரு பகுதி' என, 'அல் குவைதா' பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜார்க்கண்ட் இளம்பெண் தெரிவித்துள்ளார். 'அல் குவைதா' பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷாமா பர்வீன், 30, என்ற இளம்பெண்ணை, பெங்களூரு ஆர்.டி.நகர் மனோராயனபாளையாவில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கடந்த மாதம் 29ம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குஜராத் அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில் அவரிடம் குஜராத் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் தெரிவித்த தகவல்கள் குறித்து, பெங்களூரு போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ஷாமா பர்வீனும், குஜராத்தில் கடந்த 22ம் தேதி கைது செய்யப்பட்ட, 'அல் குவைதா' அமைப்புடன் தொடர்பில் இருந்த நான்கு பேரும், இந்திய துணை கண்டத்தில் அல் குவைதா சித்தாந்தங்களை பரப்பியதும், இந்திய முஸ்லிம்களை வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட துாண்டியதும் தெரியவந்தது. அல் குவைதா அமைப்பின் தலைவர்கள், பயங்கரவாதம் பற்றி பேசிய வீடியோக்களை, ஷாமா பர்வீன் தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளார். சில முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து, ஷாமா பர்வீன் அவர்களுடன் பேசியுள்ளார். 'நீங்கள் நம் மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளீர்கள். 'இந்தியாவில் நமக்கு பாதுகாப்பு இல்லை. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்' என, மூளைச்சலவை செய்துள்ளார். ஷாமா பர்வீனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10,000 பேர் பின்தொடர்கின்றனர். அதில், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருக்கின்றனரா என்பது குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஆக 01, 2025 13:28

துஷ்டரைக்கண்டால் தூர விலகு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 01, 2025 11:48

இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று இவர்களே கூறுவதால் ஆக இந்த பத்தாயிரம் பேரையும் மற்றும் இந்த பெண் இவரது கூட்டாளிகள் அனைவரையும் இவர்களுக்கு பாதுகாப்பான பாகிஸ்தானுக்கு நாடு கடத்தி விடவும். அவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.


பெரிய ராசு
ஆக 01, 2025 10:48

இஸ்லாமை பின்பற்றுவான் ஒரு நாளும் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்க மாட்டான், அத்தி பூ போல சிலர், கலாம் போல உண்டு ..


மூர்க்கன்
ஆக 01, 2025 11:34

உலகம் ரொம்ப பெருசு ??? மூளை ரொம்ப சிறுசு??


பெரிய ராசு
ஆக 06, 2025 14:30

உன்னை போல உன் பேரு சொல்லுது உன்னுடைய லச்சனத்தை ...


வாய்மையே வெல்லும்
ஆக 01, 2025 09:59

திருட்டு புத்தி கொண்டவளுக்கு ஆயிரம் அல்லக்கை விசிறிகள். எல்லாரையும் பிடிச்சி விசாரிங்க..


veeramani
ஆக 01, 2025 09:06

ஒரு சுதந்திர தியாகியின் குடும்பத்தினர் என்ற வகையில் கருத்து. 1947கலீல் சுதந்திர பாரதம் தோன்றியதிலிருந்து இந்தியாவில் உள்ள அல்லாஹ்வை வழிபடும் மதத்தினர் இந்திய நாட்டின் தகைசால் பெருமையை குலைக்கும் வகையில் இழிவான காரியங்கள் செய்கிறார்கள். முதலில் அவர்களது இந்திய குடியுரிமையை பாஸ்போர்ட் தடுத்து நிறுத்தவேண்டும். பின்னர் சட்டத்தை பாதுகாப்பவர்களின் கையில் இவர்களை விசாரணைக்கு எடுத்துச்செல்லலாம். முன்னொரு காலத்தில் செய்தது போல இவர்களை இவருக்காக பிரச்சாரம் செய்கிறார்களோ அந்த நாட்டின் எல்லையில் தூக்கி சென்று வீசவேண்டும்


மூர்க்கன்
ஆக 01, 2025 11:38

யார் அந்த தியாகி பாஸ் ??? யாரோ தபால் பெட்டியில நெருப்பை போட்டுட்டாளாம் ??அதுக்கு வேடிக்கை பார்த்துண்டு இருந்த உங்க குடுப்பதினரை ஒருநாள் ஜெயிலுல வச்சு சாயங்காலம் வெளியே விட்டுட்டாளாம்?? அதுக்கு தியாகி பென்ஷன் வாங்கிட்டார் ?? அதானே?? வெளங்கிடும் நம்ம தேசம். சுதந்திரம்னா என்னனு தெரியுமா?? தியகம்னா என்னன்னு தெரியுமா?? செல்லுலார் ஜெயில்ல அடைபட்ட சிங்கங்கள் தெரியுமா??


Kulandai kannan
ஆக 01, 2025 08:27

இபிஎஸ் இதைப் படிக்கவும்.


Jack
ஆக 01, 2025 08:06

என்ன அளவுகோல் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் ?


N.Purushothaman
ஆக 01, 2025 06:53

நீ பங்களாதேஷோ அல்லது பாகிஸ்தானோ போனால் கூட உன்னிய ஹிந்துஸ்த்தானின்னு அவனுங்க சொல்லுவானுங்க .. இரண்டாந்தரமாகத்தான் நடத்துவானுங்க ...


Kasimani Baskaran
ஆக 01, 2025 04:15

தீவிரவாதம் செய்ய வரிசை கட்டி நிற்கும் இதுகளை எதற்கு நாட்டுக்குள் விட்டு வைக்க வேண்டும்?


சமீபத்திய செய்தி