உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் ஐ.டி., ஊழியர்களுக்கு... 14 மணி நேர வேலை? மாநில அரசின் சட்டத்துக்கு எதிர்ப்பு

கர்நாடகாவில் ஐ.டி., ஊழியர்களுக்கு... 14 மணி நேர வேலை? மாநில அரசின் சட்டத்துக்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்யும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நாட்டின், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையமாக, கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் விளங்கி வருகின்றன.மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் அதிகளவில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய சமீபத்தில் திட்டமிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, இந்த முடிவை கர்நாடக அரசு கைவிட்டது.

சட்டத்திருத்தம்

இந்நிலையில், ஐ.டி., துறையில் பணியாற்றுவோருக்கான வேலை நேரத்தை, 10 மணி நேரத்தில் இருந்து, 14 மணி நேரமாக உயர்த்தும் வகையில், கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநில தொழிலாளர் நலத்துறை சமீபத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையின்படி, இந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களில், 45 சதவீதம் பேர், மன அழுத்தம் உள்ளிட்ட மனநல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அதுபோல, 55 சதவீதம் பேர் உடல்நல பாதிப்பையும் சந்தித்து வருகின்றனர்.ஏற்கனவே, ஓவர்டைம் எனப்படும் கூடுதல் வேலை நேரம் உட்பட, 10 மணி நேரம் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேற்பட்ட நேரம், ஊழியர்கள் பணியாற்றும் நிலை உள்ளது.

பாதிப்பு ஏற்படும்

இந்நிலையில், 14 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தினால், அது ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இது மனிதநேயமில்லாத ஒரு முயற்சியாகும். தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு சேவையாற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு, கர்நாடகாவில் பணியாற்றும், 20 லட்சம் பேருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.தற்போது, மூன்று ஷிப்டுகளில், ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், அதை இரண்டு ஷிப்டுகளாக குறைத்து, அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி விடுவர்.இந்த சட்டத்திருத்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், 20 லட்சம் பேரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, மற்றொரு ஆலோசனை கூட்டத்தை நடத்துவதாக, கர்நாடக அரசு நேற்று அறிவித்துள்ளது.இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயணமூர்த்தி, 'இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்' என, ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Mm.perumal
ஜூலை 21, 2024 23:39

இந்த அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது பண்றேன்னு சொல்லி ஓட்டு வாங்கி ஜெயித்த பிறகு ஆசியில் வந்து அமர்ந்து கொண்டு மக்களை மதிக்காமல் கார்போரேட்டுகளின் காசுக்கு ஆசைபட்டு அவர்களின் கைக்கூலியாய் மாறி மக்களை காலில் போட்டு மிதித்து கார்போரேட்டுகள் கொடுக்கும் பிச்சைக்காக கையேந்தி பபுத்தியில்லா தனமான திட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டு வருகின்றனர். எந்த ஒரு ஆட்சியாளராகிய கட்சியினரும் மமக்களை வஞ்சித்து முன்னேறியதாக சரித்திரமே இல்லை.அது போல கர்நாடகா அரசும் சீக்கிரத்தில் கவிழ்ந்துவிடும்.


Chakkaravarthi Sk
ஜூலை 21, 2024 20:03

எனக்கு புரியவில்லை, ஏன் இந்த அவசரம்??? தங்க முட்டை போடும் வாத்தை அறுத்தால் அது உயிரை விட்டுவிடும் என்று புரியாமல் இருக்கிறார்களா??? ஒரே நாளில் மொத்த உலகத்தின் செல்வங்களை ஈட்டி வரவேண்டும் என்று எண்ணுவது அறிவற்ற செயல் பொருளாதார முன்னேற்றம் தேவை தான் ஆனால் இந்த சட்டத்தை இயற்றும் அரசுகள் ஏன் ஒன்று இரண்டு மனநல மருத்துவர்களை பங்கேற்க செய்து அவர்கள் ஆலோசனை பெறலாமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகி மனிதவளத்தை அழித்து விடும்


Raju erulappan
ஜூலை 21, 2024 17:48

why not the companies recriut and spent on the salaries and wages to another


Subash BV
ஜூலை 21, 2024 13:49

This is a suitcase govt. Take care of INC. EVERYTHING WILL HAPPEN AS YOU LIKE.


Nagercoil Suresh
ஜூலை 21, 2024 10:58

மனிதன் படைக்கப்பட்டுள்ள விதம் பகலில் கண்விழித்திருக்கவும் இரவில் தூங்குவதற்கும், இந்த இரண்டில் எதை தவிர்த்தாலோ அல்லது மாத்தினாலோ அவன் கெதி அதொகெதி தான்...நாடு மட்டும் வளர்ந்தால் போதாது மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், வளர்ந்த நாடுகளை விட நடுத்தர நாட்டு மக்கள் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆராச்சிகள் தெரிவிக்கிறது, வளர்ந்த நாடுகளில் ஏன் மக்கள் தொகை குறைகிறது என நாராயண மூர்த்திக்கு கூற முடியுமா? சரியான தூக்கமின்மை உடல் ரீதியாக ஏதாவது ஒரு பார்ட்டை செயல் இழந்துக்கொண்டே இருக்கும், பணத்திற்காக நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம் தவறில்லை ஆனால் மாநில அரசே சட்டம் கொண்டுவருவது கேவலமான செயல், ஸ்டாலின் அரசும் 10 மணி நேரம் என கொண்டு வந்தது ஆனால் தமிழக மக்கள் அறிவானவர்கள் எதிர்ப்பை கிளப்பினார்கள் காலில் வெந்நீர் பட்டதைப்போல் உடனே யு டர்ன் அடித்து விட்டார்கள்.. முன்னோர்கள் ஒரு கதை கூறுவார்கள் ஒரு இளைஜரும் ஒரு உலகபணக்காரரும் தூண்டில்போட்டு அருகருகே உட்க்கார்ந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தார்களாம் அப்போது அந்த பணக்காரர் இளைஜரை பார்த்து எதற்கு மீன் பிடிக்கிறாய் என கேட்டாராம் அதற்கு அந்த இளைஜர் நான் இதை பணத்திற்கு விற்பேன் என கூறியபடி திருப்பி அந்த பணக்காரரிடம் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டானாம் அதற்கு அவர் நான் கஷ்டப்பட்டு படித்து, பல துறைகளில் வேலை செய்து, பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளேன் இதைவைத்து நான் என்ன செய்வது என்னுடைய மன இளைப்பாறுதலுக்காக இங்கு வந்தேன் என கூறினாராம் உடனே அந்த இளைஜர் நானும் அதையே தானே செய்கிறேன்...


Swaminathan L
ஜூலை 21, 2024 10:45

தமிழகத்தில் முயற்சித்து கைவிட்ட விஷயம் இது. செயற்கை நுண்ணறிவு ஆதிக்கத்தால், ஐடி துறையில் ஆட்குறைப்பு நிறையவே செய்ய வேண்டிய கட்டாயம். இப்படி ஒரு சட்டம் வந்தால் அதை வைத்து ஒரு ஷிஃப்ட் ஆட்களை அப்படியே அகற்றலாம். வேலைப்பளு தாங்காமல் இன்னும் பலரும் வெளியேறினால் இன்னும் நல்லது.


தமிழ்வேள்
ஜூலை 21, 2024 10:20

காங்கிரஸ் மற்றும் திராவிடம், தாங்கள் பண்ணையார் கும்பல் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன..தொந்தி பெருத்த காங்கிரஸ் பண்ணையார் கும்பலை சாட்டையால் அடித்து 20 மணிநேரம் தொடர்ந்து கல் உடைக்கும் வேலை செய்ய சொன்னால்தான் சீரானவேலை ஓய்வு உறக்கம் பற்றிய புரிதல் வரும்..


Shekar
ஜூலை 21, 2024 09:18

எங்கள் மாநிலத்திற்கு யாரும் தொழில் செய்ய வராதீர்கள் என்று அந்த காங்கிரஸ் மாடல் அரசு சொல்கிறதோ. அதனால்தான் 100 சதம் கன்னடர், 14 மணிநேர வேலை போன்றவற்றை அமல்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது. திராவிட மாடல் வழியில் காங்கிரஸ் மாடல்


GMM
ஜூலை 21, 2024 08:14

ஐ.டி ஊழியர்களுக்கு 14 மணி நேர வேலை என்றால், தொடர்புடைய அரசு அலுவலகம், போலீசார், ஆஸ்பத்திரி, நீதிமன்றம் 14 மணி நேரம் திறந்து இருக்க வேண்டாமா? ராகுல் காங்கிரஸ், திராவிட இயக்கம், ஆம் ஆத்மி மக்களை வஞ்சிக்க விதவிதமாக யோசிக்கும்.


Dharmavaan
ஜூலை 21, 2024 07:36

பொருளாதாரத்தை நலனை அனுபவிக்க உயிர் வேண்டும் உடல்நிலை வேண்டும் அதுகேட்டு என்ன பொருளாதாரம் வாழ்வதற்கே வேலை வேலைக்காக வாழ்வு இல்லை


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி