உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடற்படையில் இணைந்தது 2வது நீர்மூழ்கி போர் கப்பல்

கடற்படையில் இணைந்தது 2வது நீர்மூழ்கி போர் கப்பல்

புதுடில்லி : நம் கடற்படைக்கு எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. முதலாவதாக தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ். அர்னாலா, கடந்த ஜூன் மாதம் நம் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ்., ஆண்ட்ரோத் கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. 253 அடி நீளம் உடைய இந்த கப்பல் மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவை சேர்ந்த, 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினியர்ஸ்' நிறுவனத்தால் கட்டப்பட்டது. இது, நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ramesh s
செப் 16, 2025 18:46

சொந்த கருத்து எதுவும் இல்லாமல் மற்றவர்கள் கருத்துக்களை குறை சொல்வதற்காகவே சில பேர் சுற்றி வருகின்றனர்.


selvaraj
செப் 16, 2025 10:14

நீர்மூழ்கி கப்பல் இல்லை. இது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல். Anti Submarine Ship


ramesh s
செப் 16, 2025 09:09

இதுதான் உங்க ஊர்ல நீர்மூழ்கி கப்பலா. உங்களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை. அதிமுகவ மேல் வன்மத்தை கக்குவதுதான் உங்களுக்கு நல்லா வருமே. அந்த வேலையை பார்க்க வேண்டியது தானே. உங்கள நம்பிய அண்ணாமலையை இப்படி கை விட்டு விட்டீர்களே.


Espionage
செப் 16, 2025 12:51

இணையத்தில் ஏதோதோ கருத்துப்பதிவிட வேண்டும் என்று சிலபேர் சுற்றுவார்கள் போல


முக்கிய வீடியோ